×

ஊதியம் வழங்க கோரி குடிநீர் ஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

 

உடுமலை, மே 9: திருமூர்த்தி அணையில் இருந்து பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குடிநீர் விநியோகிக்கும் வால்வு இயக்குதல், பராமரித்தல் உள்ளிட்ட பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களுக்கு கடந்த ஒன்றரை மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுபற்றி கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து, நேற்று திருமூர்த்திமலையில் உள்ள சுத்திகரிப்பு நிலையம் முன்பு 39 குடிநீர் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், குடிநீர் விநியோக பணிகள் பாதிக்கப்
பட்டுள்ளன.

Tags : Udumalai ,Thirumoorthy dam ,
× RELATED பங்குச்சந்தை முதலீட்டாளர் தற்கொலை