×

எஸ்ஐஆர் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் இருந்து முன்னாள் நீதிபதி டிஎஸ் சிவஞானம் விலகல்

 

கொல்கத்தா: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடவடிக்கையை தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவது தொடர்பாக நீதித்துறை அதிகாரிகள் எடுத்த முடிவுகளுக்கு எதிராக எழும் மேல்முறையீடுகளை விசாரிப்பதற்காக உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்பேரில் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தீர்ப்பாயத்தில் 19 முன்னாள் நீதிபதிகள் இடம்பெற்று இருந்தனர். இந்நிலையில் இந்த தீர்ப்பாயத்தில் இருந்து கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானமும் விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து முன்னாள் நீதிபதி அளித்த பேட்டியில்,” நான் எனது ராஜினாமா கடிதத்தை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ளேன்” என்றார். இந்த மேல்முறையீட்டு வழக்குகளில் முன்னாள் நீதிபதி பிறப்பித்த மிக முக்கியமான உத்தரவுகளில் ஒன்று மோதாப் ஷேக் என்பவரின் பெயரை வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர்ப்பதாகும். காங்கிரஸ் வேட்பாளரான இவர் பின்னர் பராக்கா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags : Former ,Justice ,DS ,Sivagnanam ,SIR Appellate Tribunal ,Kolkata ,Election Commission ,Supreme Court ,
× RELATED மேற்குவங்க மாநில முதலமைச்சராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி!