×

உலகளாவிய எண்ணெய் நெருக்கடியை இந்தியா சமாளித்தது எப்படி?

மும்பை: இதுவரை உலகம் கண்டிராத மிகக் கடுமையான எரிசக்தி விநியோக பாதிப்பை, கடந்த இரண்டு மாதங்களில் கண்டது. உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் கிட்டத்தட்ட 20 சதவீதம் மற்றும் உலகின் எரிவாயு வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதே இதற்கு முக்கிய காரணமாகும். ஏற்கனவே மேற்கு ஆசியா நாடுகளில் மோதல் அதிகரித்துள்ள நிலையில், இது உலகளாவிய பாதிப்பை ஏற்படுத்தது.

ஒரு சில வாரங்களுக்குள் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு கிட்டத்தட்ட 73 டாலரிலிருந்து 126 டாலராக உயர்ந்தது. அதாவது விலை கிட்டத்தட்ட 72 சதவீதம் அதிகரித்தது. கப்பல் போக்குவரத்து செலவுகளும் கடுமையாக உயர்ந்தன. இது திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகமும் பாதிக்கப்பட்டது. மேலும் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் எரிபொருள் ரேஷன் முறை, சேமிப்பு ஆலோசனைகள், மற்றும் நேரடி எரிபொருள் விலை உயர்வு போன்ற அவசர நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தின.

இந்தச் சூழலை வளைகுடா போர் காலத்திற்குப் பிந்தைய மிகக் கடுமையான எண்ணெய் விநியோக பாதிப்பு உலகளாவிய எரிசக்தி சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர். ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவிய உறுதியற்ற சூழல், இறக்குமதி வர்த்தகத்தில் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பணவீக்கத்தை ஏற்படுத்தும் என அவர்கள் எச்சரித்தனர். எரிசக்தியை இறக்குமதி செய்வதை சார்ந்துள்ள நாடுகள், விநியோக பாதிப்பை சரி செய்வதோடு பணவீக்கத்தையும் கட்டுப்படுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருப்பதாக சர்வதேச அளவில் பேசப்பட்டது.

இத்தகைய ஒரு கடுமையான சூழலை எதிர்கொண்ட இந்தியா, உலக நாடுகளிடையே ஒரு குறிப்பிடத்தக்க உதாரணமாக உருவெடுத்துள்ளது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளர்களில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. ஆன போதிலும், கச்சா எண்ணெய் இறக்குமதியில் கிட்டத்தட்ட 88 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தியை நம்பியிருந்தாலும் நுகர்வோரின் அன்றாட வாழ்க்கை பெருமளவில் தடையின்றி இயங்குவதை இந்தியா உறுதி செய்தது. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிலையாக இருந்தன. எல்.பி.ஜி விநியோகம் நாடு முழுவதும் தடையின்றித் தொடர்ந்தது. மேலும் பற்றாக்குறையோ, ரேஷன் முறைகளோ அல்லது அன்றாட நடவடிக்கைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்தியாவின் ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் நீண்டகால எரிசக்தி தயார்நிலை ஆகியவை உலகளாவிய ஏற்ற இறக்கங்களின் உடனடி பாதிப்பிலிருந்து குடும்பங்களை எவ்வாறு பாதுகாக்கும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இருப்பதாக தொழில்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த நெருக்கடியைக் கண்காணிக்கும் பொருளாதார வல்லுநர்கள், பல்வேறு நாடுகளில் இந்த சுமையை நுகர்வோரிடம் திருப்பிய போதிலும் இந்தியா இந்தியா உலகளாவிய நிச்சயமற்ற காலக்கட்டத்தில் கூட எரிபொருள் விநியோகத்தை சீராக்கி உள்நாட்டில் விநியோகம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ததாக குறிப்பிடுகின்றனர்.

எரிவாயு நெருக்கடி தீவிரமடைந்ததால், இந்தியா பல கோணங்களில் விரைவாகச் செயல்பட்டது. எல்.பி.ஜி உற்பத்தியை அதிகப்படுத்துமாறு சுத்திகரிப்பு நிலையங்கள் அறிவுறுத்தப்பட்டன. இதன் விளைவாக உள்நாட்டு உற்பத்தி கணிசமாக அதிகரித்தது. அத்தியாவசியத் துறைகளைப் பாதுகாப்பதற்காக இயற்கை எரிவாயு விநியோகத்தில் வீடுகள், பொதுப் போக்குவரத்து வலையமைப்புகள் மற்றும் உரத் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதே நேரத்தில், இந்தியா கச்சா எண்ணெய் ஆதாரங்களை வளைகுடா பாதைகளிலிருந்து ரஷ்யா, அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் பிற பிராந்தியங்களுக்கு திருப்பி விடுவதையும் துரிதப்படுத்தியது. மூலோபாய இருப்புக்கள், உயர் சுத்திகரிப்பு நிலைய பயன்பாடு மற்றும் விரிவான எரிபொருள் விநியோக வலையமைப்பு ஆகியவை உலகளாவிய எரிசக்தி விநியோகம் நிலையற்றதாக இருந்தபோதும் இந்தியாவில் தடையற்ற விநியோகத்தை உறுதிப்படுத்த உதவின.

விலை நிர்ணயத்தில், அரசாங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரிகளைக் குறைத்தது. அதே நேரத்தில் பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையின் உயர்வின் பெரும் பகுதியை நுகர்வோருக்கு நேரடியாக மாற்றாமல் தாங்களே சமாளித்துக் கொண்டன. கச்சா எண்ணெய் விலை பெருமளவு அதிகரித்த போது, பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.24 மற்றும் டீசலில் லிட்டருக்கு கிட்டத்தட்ட ரூ.30 அளவுக்கு விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. இது உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தைகளில் ஏற்பட்ட கடுமையான உயர்வுக்கு மத்தியிலும் சில்லறை எரிபொருள் விலையில் ஸ்திரத்தன்மையைப் பராமரிக்க உதவியது.

உலகளாவிய பிரச்னையில் இந்தியாவின் செயல்பாடு குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. வங்கதேசம் எரிபொருள் ரேஷன் முறையை அறிமுகப்படுத்தியது. இலங்கை நான்கு நாள் வேலை வாரத்துடன் எரிபொருள் பாஸ் முறையை அமல்படுத்தியது. பிலிப்பைன்ஸ் தேசிய எரிசக்தி அவசரநிலையை அறிவித்தது, அதே நேரத்தில் தென் கொரியா பல தசாப்தங்களில் முதல் முறையாக எரிபொருள் விலை உச்சவரம்பை அறிமுகப்படுத்தியது. பல ஐரோப்பிய பொருளாதாரங்கள் சில்லறை எரிபொருள் விலைகள் உயர்ந்ததால் பெரிய அளவிலான மானியத் தொகுப்புகளை வெளியிட்டன. ஆனால், இந்தியா மட்டும் நுகர்வோருக்கு பாதிப்புகள் எதுவுமின்றி தொடர்ச்சியையும் ஸ்திரத்தன்மையை பேணிக் காத்தது.

இந்தியாவின் இத்தகைய எதிர்வினை பல ஆண்டுகால மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் கொள்கை சீர்திருத்தங்களின் விளைவு என்று எரிசக்தி பார்வையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த தசாப்தத்தில், இந்தியா எல்.பி.ஜி உள்கட்டமைப்பை விரிவுபடுத்தியது, இறக்குமதி முனையங்களை இரட்டிப்பாக்கியது, சுத்திகரிப்பு திறனை அதிகரித்தது, கச்சா எண்ணெய் ஆதாரங்களை 27 நாடுகளில் இருந்து 40 நாடுகளாக அதிகரித்தது, எத்தனால் கலப்பை துரிதப்படுத்தியது மற்றும் மூலோபாய பெட்ரோலிய இருப்புக்களை உருவாக்கியது என பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டிருந்ததாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். எண்ணெய் மற்றும் எரிவாயு துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள், இந்த நீண்டகால நடவடிக்கைகள் இந்தியாவுக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியுள்ளதாக நம்புகின்றனர். இது சமீபத்திய வரலாற்றில் கடினமான உலகளாவிய எரிசக்தி சூழல்களில் ஒன்றை இந்தியா எதிர்கொள்ள உதவியதாகவும் கூறுகின்றனர்.

உலகமே மிகக் கடுமையான உலகளாவிய எண்ணெய் விநியோக பாதிப்பை எதிர்கொண்ட போது, இந்தியா மட்டும் இந்த உலகளாவிய எரிசக்தி நெருக்கடி, குடும்ப நெருக்கடியாக மாறாமல் தடுப்பதில் வெற்றி பெற்றது. பெரும்பாலான இந்திய நுகர்வோருக்கு, அன்றாட வாழ்க்கை சாதாரணமாகத் தொடர்ந்தது. இது நாட்டின் எரிசக்தி சூழல் அமைப்பில் திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் நீண்டகால முதலீட்டின் வலிமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Tags : India ,oil crisis ,Mumbai ,Strait of Hormuz ,
× RELATED ராணுவ தலைமை தளபதியாக தமிழ்நாட்டை...