சென்னை: 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 95.2% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். 12ம் வகுப்பு தேர்வில் 98.87 சதவீத தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்தது. இந்நிலையில் பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 13ம் தேதி வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
