காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் நாகலாந்து ஆளுநர் தரிசனம்

 

காஞ்சிபுரம், மே 8: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில், நாகலாந்து மாநில ஆளுநர் நந்த் கிஷோர் யாதவ் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் காமாட்சி அம்மன் உருவப்படம், காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் படம் மற்றும் கோயில் குங்குமப் பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டது.
பின்னர் காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்று, அங்கு நடைபெற்ற சந்திர மவுலீசுவரர் பூஜையில் பங்கேற்றார். தொடர்ச்சியாக சங்கர மடத்தில் உள்ள அதிஷ்டானங்களில் தரிசனம் செய்தார். காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு சங்கராசாரியர் சுவாமிகள், ஆதிசங்கரரின் உருவப்படம், பழங்கள் ஆகியவை வழங்கியதுடன் சால்வை அணிவித்து, ஆசி வழங்கினார்.
நிகழ்வின்போது, இளைய பீடாதிபதி சத்திய சந்திர சேகரேந்திரர், சங்கரா பல்கலையின் துணை வேந்தர் நிவாசு, காஞ்சி நகர வரவேற்பு குழு ஒருங்கிணைப்பாளர் கணேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், நாகலாந்து மாநில ஆளுநர் நந்த் கிஷோர் யாதவ்க்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

Related Stories: