சோழிங்கநல்லூர், மே 8: தண்டையார்பேட்டையில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய உறவினரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர் தண்டையார்பேட்டையில் தன்னுடைய அண்ணன் வீட்டில் தங்கி தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்து வருகிறார். இவரது தூரத்து உறவினரான காசிமேடு ஜிஎம் பேட்டையை சேர்ந்த மணி பாரதி (35) என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த வாரம் அண்ணன் குடும்பத்தினர் கோயிலுக்கு சென்றதால் இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த மணி பாரதி இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி அத்துமீற முயன்றார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மணி பாரதி இளம்பெண்ணை மிரட்டிவிட்டு சென்றார். இதுகுறித்து இளம்பெண் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், மகளிர் போலீசார் வழக்கு பதிந்து இளம் பெண்ணிடம் அத்துமீறிய மணி பாரதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
