×

தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி திருத்தணியில் போலீசார் குவிப்பு

 

திருத்தணி, மே 8: தவெக ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காத நிலையில், தமிழகத்தில் போராட்டங்கள், வன்முறைகளில் ஈடுபட வாய்ப்புகள் இருப்பதால், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் போலீசார் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். திருத்தணி நகரில் சென்னை பைபாஸ் சாலை, பேருந்து நிலையம், சித்தூர் சாலை உள்பட முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு அதிகரித்து தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags : Tiruttani ,TDP government ,Tamil Nadu ,Tiruvallur ,
× RELATED வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி திருட்டு