திருவள்ளூர், மே 8: தேர்தல் விதிமுறைகள் தளர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் 11ம் தேதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என்று கலெக்டர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தினால் தளர்வு செய்யப்பட்ட நிலையில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் வாரந்தோறும் திங்கள்கிழமை அன்று நடைபெற்று வந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமானது நடைபெற உள்ளது.
அதன்பேரில், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில், வரும் 11ம் தேதி முதல் வாரந்தோறும் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு, தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
