×

பேரம்பாக்கம் வைகுண்ட பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா தொடக்கம்

 

திருவள்ளூர், மே 7: பேரம்பாக்கம் வைக்குண்ட பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் பழமையான கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 26ம் ஆண்டு சித்திரை பிரமோற்சவ விழா நேற்று காலை 7.30 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த பிரமோற்சவ விழா வரும் 15ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் காலை, மாலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு சிம்ம வாகனம், சந்திர பிரபை வாகனம், நாக வாகனம், கருட வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதிஉலா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 12ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை திருத்தேர் திருவிழாவும், வரும் 14ம் தேதி (வியாழக்கிழமை) காலை தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் மற்றும் கிராம பொது மக்கள் செய்து வருகின்றனர்.

Tags : Chithirai Brahmotsava festival ,Perambakkam Vaikunda Perumal Temple ,Tiruvallur ,Kamalavalli Sametha Vaikunda Perumal Temple ,Perambakkam ,26th Chithirai Brahmotsava festival ,
× RELATED ஊத்துக்கோட்டை காட்டுச்செல்லி அம்மன்...