கரூர், மே. 6: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரத்தினம் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை விரைந்து அகற்றிட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரத்தினம் சாலையின் வழியாக ரயிலவே நிலையம், ஐந்து ரோடு, வாங்கல, நெரூர், புலியூர் போன்ற பல்வேறு பகுதிகளு்ககு செல்லும் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. மேலும், இந்த பகுதியை ஒட்டி அதிகளவு குடியிருப்புகள் உள்ளன.
இந்நிலையில், இந்த பகுதியில் சேகரிப்படும் குப்பைகள் சாலையோரம் கொட்டப்படுவதால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே, இந்த பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை அவ்வப்போது அகற்றிட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கி்றனர். துறை அதிகாரிகள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி தேவையான சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
