வேலாயுதம்பாளையம், மே. 4: கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே பெரிய ரெங்கம்பாளையம் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீச போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் பெரிய ரெங்கம்பாளையம் பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அங்கு மாட்டு தொழுவத்தில் மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்துக்கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது .அதன் அடிப்படையில் பெரிய ரெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு(57) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரிக்கின்றனர்.
