லாலாப்பேட்டை, மே. 6: லாலாப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் சுமார் 1/2 மணி நேரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்தது. கரூர் மாவட்டம் லாலாபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளான கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, புனவாசிப்பட்டி, மகிளிப்பட்டி, பஞ்சப்பட்டி, போத்துராவுத்தன்பட்டி வயலூர், வரகூர், தாளியாம்பட்டி, பிள்ளபாளையம் ஆகிய பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக நேற்று சுமார் 1/2 மணி நேரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியடைந்து குளிர்ந்த சீதோசன நிலை ஏற்பட்டதால் மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.
