பந்தலூர், ஏப்.25: கத்தாரில் இருந்து ரூ.70 ஆயிரம் செலவு செய்து வந்து பிதர்காட்டில் வாக்காளர் வாக்களித்தார். பந்தலூர் அருகே பிதர்காடு பகுதியில் வசித்து வந்தவர் கிஷோர்குமார் (46). இவர், கத்தாரில் செவிலியராக பணிப்புரிந்து வருகிறார்.
இந்நிலையில், இவர் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அங்கிருந்து பந்தலூர் அருகே பிதர்காடு பகுதிக்கு வந்தார். தொடர்ந்து அவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இவர், கத்தாரில் இருந்து வர ரூ.70 ஆயிரம் செலவு செய்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியதாக தெரிவித்தார்.
