காதல் மனைவியுடன் தகராறு: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு, ஏப். 25: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பட்ரமங்கலம் பகுதியை சேர்ந்த குமார் மகன் கிருஷ்ணன் (28). கூலி தொழிலாளி. கிருஷ்ணன், கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த மம்தா என்பவரை காதல் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளது.

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறினால், அவரை பிரிந்து கடந்த 3 மாதங்களாக அவரது தாய் வீட்டில் தங்கி, கூலி வேலைக்கு சென்று வந்தார். மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்த மனவேதனையில் இருந்த கிருஷ்ணன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிநது விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Related Stories: