கோவை, நீலகிரியில் ஏப்.27ல் இபிஎப்ஓ குறைதீர்ப்பு கூட்டம்

 

கோவை, ஏப். 22: கோவை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் இணைந்து பங்குதாரர்களின் குறைகளை சரிசெய்ய குறைதீர்ப்பு கூட்டத்தை “நிதி ஆப்கே நிகட் 2.0” என்ற பெயரில் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, வரும் 27-ம் தேதி கோவை அவிநாசி ரோடு நவஇந்தியா இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி சாணக்யா ஹாலில் நடக்கிறது. நீலகிரி மாவட்டத்திற்கு ஊட்டி குன்னூர் ரோடு, எல்லனகள்ளி, நீடில் இண்டஸ்ட்ரீ கேன்டீன் ஹாலில் நடக்கிறது.

இதில், வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், இஎஸ்ஐசி பயனாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களின் குறைகள், பிரச்னைகளை காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தெரிவிக்கலாம். குறைகளை தீர்க்க யுஏஎன் அல்லது வைப்பு நிதி கணக்கு எண், ஓய்வூதிய நியமன ஆணை எண் அல்லது இஎஸ்ஐசி ஐபி எண் அவசியம் ஆகும். மேலும், இபிஎப்ஓ தொடர்பான குறைகளை pghs.rocbe@epfindia.gov என்ற மின்னஞ்சல் மூலமாகவும், இஎஸ்ஐசி-க்கு benefit-srokovai@esic.nic.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம் என கோவை மண்டல வைப்பு நிதி ஆணையாளர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

Related Stories: