ஆபத்தான நிலையில் பஸ் நிலைய மேற்கூரை

கோவை, ஏப். 25: கோவையில் ஆபத்தான நிலையில் உள்ள பஸ் நிலைய மேற்கூரையால் பயணிகள் அச்சத்தில் உள்ளனர். கோவை சாயிபாபா காலனி அருகே மேட்டுப்பாளையம் சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் கர்நாடகா மாநிலத்தின் சில பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பேருந்து நிலையத்தின் பராமரிப்பு மோசமாக உள்ளது. இதன் ஒரு பகுதி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மறுபுறம் உள்ள பகுதி பராமரிப்பின்றி புதர்மண்டி காட்சியளிக்கிறது. கழிப்பறையும் அசுத்தமாக உள்ளது. இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது.

தற்போது பேருந்து நிலையத்தின் மேற்கூரை சேதமாகி காணப்படுகிறது. ஒரு புறத்தில் உள்ள தகர சீட் உடைந்து கீழே விழும் நிலையில் தொங்கி கொண்டு உள்ளது. கீழே விழுந்தால் பயணிகள் காயமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு அதிகாரிகள் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

Related Stories: