செல்போன் டவரில் காப்பர் வயர் திருடிய வடமாநில வாலிபர் கைது

 

சென்னிமலை, ஏப்.22: சென்னிமலை அருகே செல்போன் டவரில் காப்பர் வயர் திருடிய வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னிமலை அருகே அரச்சலூர் ரோட்டில் காளிக்காவலசு அருகில் தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் உள்ளது. இந்த டவரில் உள்ள காப்பர் வயரை நேற்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் திருடி கொண்டு இருந்தார். இதனை, செல்போன் டவரில் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்த ஈங்கூர் சரவணம்பதியை சேர்ந்த தினேஷ்குமார் (36) என்பவர் பார்த்து அந்த நபரை கையும், களவுமாக பிடித்து சென்னிமலை போலீசில் ஒப்படைத்தார்.‌
போலீசார் விசாரணையில் அந்த நபர், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அன்ரல் சர்தார் (28) என்பதும், இவர் ஈரோடு நசியனூர் ரோட்டில் உள்ள வெட்டுக்காட்டுவலசில் தங்கி இருந்து கட்டிட வேலை பார்த்தது தெரிய வந்தது. பின்னர், அன்ரல் சர்தாரை போலீசா கைது செய்து அவரிடம் இருந்த 6 கிலோ காப்பர் வயரை பறிமுதல் செய்தனர்.

Related Stories: