×

விஜய்க்கு எதிராக அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

மதுரை: ‘‘தகுதி இல்லாதவன் எல்லாம் நாட்டை ஆள நினைக்கிறான்…’’ என் வாசகத்துடன் விஜய்க்கு எதிராக அஜித் ரசிகர்களால் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாள், நாளை (மே 1) கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

அதில், மே கிங் ஏகே குரூப்ஸ் என்ற ெபயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்ததுடன், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தப் போஸ்டர்களில் அஜித் படத்துடன், ‘‘நடிகராக உச்சம் பெற்றவர்! கார் பந்தய வீரராக வென்றவர்!’’ என்ற வாசகங்களைத் தொடர்ந்து ‘‘நாளை?’’ என்ற தலைப்பின் கீழ், அஜித்தின் நெற்றியில் ஒரு பெண் கை திலகமிடுவது போல படம் உள்ளது.

இந்தப் படத்தின் கீழ், ‘‘தகுதி இல்லாதவன் எல்லாம் நாட்டை ஆள நினைக்கிறான்… தமிழக மக்களை அறிவார்ந்த சமூகமாக மாற்ற விரைவில் முடிவெடு தல வா!’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை நகரின் பல்வேறு பகுதிகளிில் இந்த வாசகத்துடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் ரசிகர்கள், ெபாதுமக்கள் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் ரசிகர்களையும், நடிகர் விஜய்யையும் மறைமுகமாக தாக்கும் வகையில், ‘‘தகுதி இல்லாதவன் எல்லாம் நாட்டை ஆள நினைக்கிறான்…’’ என்ற வாசகங்கள் பரபரப்பை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே அஜித், விஜய் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் கடும் மோதல் நடந்து வரும் நிலையில், மதுரையில் அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Tags : Ajith ,Vijay ,Madurai ,Ajith Kumar ,
× RELATED மே தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து