தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச்சாலை அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

 

 

திருவண்ணாமலை, ஜூலை 31: திருவண்ணாமலை அருகே புறவழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன், புறவழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடக்ேகாரி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், ஆடையூர், தேவனந்தல், அடி அண்ணாமலை, கீழ்நாத்தூர், மேலத்திக்கான், அத்தியந்தல், முனியந்தல், சீலப்பந்தல் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, மங்களூரு- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை (என்எச் 38) புறவழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த கூடாது, 100 அடி சாலையே போதுமானதாக இருக்கும் நிலையில், 200 அடி சாலை அமைப்பது அவசியமற்றது என வலியுறுத்தி முழக்கமிட்டனர். மேலும், விவசாய நிலம் கையகப்படுத்தினால் விவசாயம் பாதிக்கப்படும் எனவும், ஒரு சில இடங்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களும் பாதிக்கப்படும் என வலியுறுத்தினர். அதோடு, தற்போதுள்ள நிலையில் கையகப்படுத்தப்படும் நிலத்தின் சந்தை மதிப்பு பல மடங்கு உயர்ந்திருக்கிறது.

எனவே, அரசு வழிகாட்டி மதிப்பை வழங்கினால், மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்றனர். அதனால், கையகப்படுத்தும் நிலை உருவானால், சந்தை மதிப்பை கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர். தொடர்ந்து, தங்களுடைய ேகாரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர்.
மேலும், இது தொடர்பாக நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தை ஏற்கனவே புறக்கணித்த நிலையிலும், தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்த அரசு ஆர்வம் செலுத்துவதை கண்டித்து, தொடர் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

 

Related Stories: