தண்டராம்பட்டு, ஆக.1: தண்டராம்பட்டு அடுத்த சே.கூடலூர் ஊராட்சியில் நேற்று மாலை கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன் தலைமையில் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட அவைத்தலைவர் கண்ணன், மாவட்ட துணை செயலாளர்கள் கிரி, பிரியா விஜய்ரங்கன், விஜயலட்சுமி ரமேஷ், மாநகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான எ.வ.வேலு கலந்துெகாண்டு பேசியதாவது: முன்னாள் முதல்வர் கலைஞருக்கு பின்பு இன்றைய கழக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இயக்கத்தை மிகச் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். அவரின் கொள்கை அடிப்படையில் திட்டங்களை முழுமையாக ஒன்று சேர பல நிர்பந்தங்களை தாண்டி நிறைவேற்றியுள்ளார்.
