- ஆசன விழா
- பாலாய் டிரினிட்டி கதீட்ரல்
- கேடிசி நகர்
- பேராலயம் புனித திரித்துவ பேராலயம்
- ஊசி கோபுரம்
- முருகன் குறிச்சி
- பாளையங்கோட்டை
- தென் ஆக்ஸ்போர்டு
- 29 ஆம் தேதி
- ஆசனம்…
கேடிசி நகர், ஏப். 30: தென்னகத்தின் ஆக்ஸ்ேபார்டு என அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் முருகன்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள ஊசி கோபுரம் எனப்படும் கதீட்ரல் தூய திரித்துவ பேராலயமானது 200வது ஆண்டு விழா காணும் நிலையில் பேராலயத்தின் மறுபிரதிஷ்டை பண்டிகை மற்றும் 29வது அசன பண்டிகை கடந்த 24ம் தேதி துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று (29ம் தேதி) புதன்கிழமை கனம் ரேனியஸ் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இன்று (30ம்தேதி) எம்கேபி நகர் சேகர தலைவர் ஆல்வின் பிரைட் தலைமையில் அசன ஆயத்த ஆராதனை நடக்கிறது. நாளை (மே 1) வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு நடைபெறும் பிரதான பண்டிகை ஆராதனையில் நெல்லை திருமண்டல பேராயர் ஏஆர்ஜிஎஸ்டி பர்னபாஸ் தேவசெய்தி அளிக்கிறார். இரவு 7 மணிக்கு அசன விருந்து மற்றும் நெல்லை செல்வின் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை சேகர திருப்பணி விடையாளர்கள் குருவானவர் பாஸ்கர் கனகராஜ் தலைமையில் குருவானவர்கள் தர்மதுரை, ஐ.டி ஸ்டீபன், டீக்கன் எஸ்.மாணிக்கராஜ் மற்றும் பேராலய திருச்சபை மக்கள் செய்துள்ளனர்.
