இலுப்பூர் ஏப்.30: இலுப்பூர் அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய இரு குழுக்களை சேர்ந்த 8 பேர் மீது இலுப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இலுப்பூர் அருகே உள்ள மலைக்குடிப்பட்டியில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக இலுப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி இலுப்பூர் போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த மலைக்குடிப்பட்டி பகுதியை சேர்ந்த சண்முகம், முனியப்பன், நல்லதம்பி, தமிழன், முருகேசன், தங்கராஜ், பழனியாண்டி, சின்னு ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து ரொக்கத்தை பறிமுதல் செய்த இலுப்பூர் போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
