×

சோலார் பேனல் அமைக்க தோண்டிய பள்ளத்தில் மாடு விழுந்து உயிரிழப்பு

அறந்தாங்கி, ஏப்.30: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே வேள்வரை பாப்பானந்தல் கிராமத்தில் தனியார் சோலார் பேனல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக அருகில் பெரும் பள்ளம் தோண்டி உள்ளனர். அந்த பகுதியில் கால்நடைகள் அதிகமாக மேய்ச்சலுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் வேள்வரை கிராமத்தை சேர்ந்த முத்து என்பவரது மாடு கடந்த மூன்று நாட்களாக காணவில்லை என அந்த கிராமத்துகளை சுற்றி தேடி வந்து உள்ளனர். எங்கும் தேடியும் மாடு கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று அந்த பகுதியில் மாடு மேய்ப்பவர்கள் உங்கள் மாடு சோலார் பேனர் அருகில் கால்வாயில் கிடப்பதாக கூறி உள்ளனர்.இதையடுத்து மாட்டின் உரிமையாளர் சம்பவ இடத்தில் சென்று பார்த்த போது மாடு இறந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது என்பது தெரிந்து அவர்கள் கிராம நிர்வாக அதிகாரியிடம் புகார் மனு அளித்து உள்ளனர். இறந்து போன கால்நடையின் மதிப்பு ரூபாய் 30,000 என கூறப்படுகிறது. மாட்டின் உரிமையாளருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 

Tags : Aranthangi ,Velvari Papanandal village ,Meemisal ,Avudaiyar Kovil taluka ,Pudukkottai district ,
× RELATED குலசை கோயில் வருஷாபிஷேக விழா