×

பெண் தற்கொலை

போடி, ஏப். 29: போடியை அடுத்த கோம்பையை சேர்ந்தவர் மதுரை வீரன்(26). கூலித் தொழிலாளி. இவரது தந்தை மணிகண்டன் இறந்த நிலையில், தாய் ஜானகி போடி அருகே அவரது மகள் கல்யாணி வீட்டில் வசித்து வந்தார். அண்மைக்காலமாக ஜானகி மிகுந்த மனக் குழப்பத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு விஷ விதைகளை அரைத்து சாப்பிட்ட அவரை மீட்டு குடும்பத்தினர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜானகி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் மதுரை வீரன் அளித்த புகாரின்பேரில். போடி தாலுகா காவல் நிலைய எஸ்ஐ விஜய் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

 

Tags : Bodi ,Madurai Veeran ,Gombai ,Manikandan ,Janaki ,Kalyani ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு