×

நிதி நிறுவன அதிபர் தூக்கிட்டு தற்கொலை

வடமதுரை, ஏப். 29: வடமதுரை அருகேயுள்ள கொட்டத்துரை பகுதியை சேர்ந்தவர் முனிசாமி (62).
இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் தங்கி நிதி நிறுவனம் நடத்தி வந்தார். முனியசாமி நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது.  இந்நிலையில் முனியசாமிக்கு கடந்த ஏப்.23ம் தேதி தும்மலக்குண்டு ஆண்டாள் அழகர் நகரில் உள்ள தனது தோட்டத்து வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டின் அருகே இருந்த புளிய மரத்தில் முனிசாமி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்ததும் வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முனியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Vadamadurai ,Muniyasamy ,Kottathurai ,Chennai ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு