×

குப்பைகளை எரிப்பதால் அவதி

மதுரை, ஏப்.29: மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து, மதுரை- திண்டுக்கல் சாலையில் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய சந்திப்புகளில் ஒன்றாக அச்சம்பத்து சந்திப்பு உள்ளது. மதுரையின் நகர் பகுதியிலிருந்து வரும் வாகனங்களும், புறநகர் பகுதியிலிருந்து வரும் வாகனங்களும் இச்சந்திப்பை கடந்தே மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. அச்சம்பத்து சந்திப்பிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் வாகனங்கள் நாகமலை புதுக்கோட்டை நோக்கி செல்லும் திசையில் வலதுபக்கம் திரும்பி, அங்குள்ள சர்வீஸ் ரோடு வழியாக செல்ல வேண்டும்.

அவ்வாறு, வாகனங்கள் செல்லும் திசையில் சாலையின் இடதுபக்கம் குப்பை கொட்டப்பட்டு எரிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதனால், உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். தேசிய நெடுஞ்சாலையோரம் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவதால் அடிக்கடி விபத்துக்களும் நடக்கின்றன. மாவட்ட நிர்வாகம் கவனித்து சர்வீஸ் ரோட்டோரம் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Madurai ,Achambattu junction ,Madurai-Theni National Highway ,Madurai-Dindigul Road ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு