புதுடெல்லி: ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், ஸ்காட்லாந்து மதுபான நிறுவனத்தின் வரி விலக்கு விற்பனை தடையை நீக்குவதற்கு உதவியதற்காக கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. 20 ஆண்டுக்குப் பிறகு காலதாமதமாக பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கை ரத்து செய்யக் கோரி கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா விசாரணையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
