கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 142 தொகுதிகளில் மொத்தமாக 1,448 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 3.22 கோடி வாக்காளர்களுக்கு மொத்தம் 41,001 வாக்குப் பதிவு மையங்கள் அமைப்பு. பாதுகாப்பிற்காக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய ஆயுதப்படை காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
