×

மேலூர் தொகுதியில் முறைகேடு புகார்; வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும்: தமிழக தேர்தல் அதிகாரியிடம் மனு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை மேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட முருகன் சந்தித்து அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
மேலூர் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு சுயேச்சையாக கம்ப்யூட்டர் சின்னத்தில் பெரியாறு ஒரு போக விவசாயிகளின் ஆதரவுடன் போட்டியிட்டேன். நாங்கள் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறும் நிலையில் இருந்த போது ஏப்ரல் 19 முதல் 22 வரை அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் பெரியபுள்ளான் (எ) செல்வம் ஒவ்வொரு ஓட்டுக்கும் பணமாக ரூ.1000 முதல் ரூ.3000 வரை தொகுதி முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து தேர்தல், விதி முறைகளை மீறி செயல்பட்டுள்ளார்.

அந்த நாட்களில் வாகன தணிக்கையும் நடைபெறவில்லை. எனது புகார்களையும் மனுக்களையும் தேர்தல் நடத்தும் அதிகாரி, மாவட்ட ஆட்சியர், தேர்தல் பார்வையாளர் ஆகியோர் கண்டுகொள்ளவில்லை. ஆகவே இது சம்பந்தமாக விசாரணை கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையிட உள்ளதால், மேலூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும், உரிய விசாரணை நடத்தி தேர்தலை ரத்து செய்து மறுதேர்தல் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Melur ,Tamil Nadu ,Election ,Officer ,Chennai ,Murugan ,Chief Electoral Officer ,Archana Patnaik ,Chennai Secretariat ,Melur Assembly ,
× RELATED தொடர்ச்சியாக 2வது நிதியாண்டில் இரட்டை...