×

சென்னையில் 2-வது ஏசி புறநகர் ரயில் இயக்கத்தை விரைவில் தொடங்க தெற்கு ரயில்வே திட்டம்..!!

சென்னை: சென்னையில் 2-வது ஏசி புறநகர் ரயில் இயக்கத்தை விரைவில் தொடங்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே தற்போது ஏசி புறநகர் ரயில் இயக்கப்படும் நிலையில் 2வது ஏசி புறநகர் ரயிலை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் இயக்க தெற்கு ரயில்வே ஆலோசித்து வருகிறது. சென்னை ICF ஆலையில் தயார் செய்யப்பட்ட ஏசி புறநகர் ரயில் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எந்த வழித்தடத்தில் இயக்குவது என தெற்கு ரயில்வே விரைவில் முடிவெடுத்து அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Southern Railway ,Chennai ,Chennai Beach ,Chengalpattu ,Central ,Arakkonam… ,
× RELATED முத்துப்பேட்டை பேரூராட்சி சார்பில்...