×

முட்டைகோஸ் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டும் விவசாயிகள்

*கிலோ ரூ.30க்கு விற்பதால் மகிழ்ச்சி

ராயக்கோட்டை : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி மற்றும் ராயக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் முட்டைகோஸ், காலிபிளவர் ஆகியவை அதிக அளளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வண்டல் மற்றும் செம்மண் நிலத்தில் முட்டை கோஸ் செழித்து வளருகிறது.

ராயக்கோட்டையில் விளைவிக்கப்படும் முட்டை கோஸ்களை, விவசாயிகள் அங்குள்ள மண்டிகளுக்கு கொண்டு வந்து ஏலத்தின் மூலம் விற்பனை செய்கின்றனர். அங்கிருந்து தமிழகத்தின் தலைநகர் சென்னை, திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை மற்றும் கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

இங்குள்ள உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட்டில் முட்டை கோஸ் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் விவசாயிகளிடம் வியாபாரிகள் கிலோவுக்கு ரூ.10 குறைத்து மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர்.

தற்போது ராயக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் விவசாயிகள் அதிக அளவில் முட்டைகோஸ் சாகுபடி செய்து வருகின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், `ராயக்கோட்டை பகுதியில் விவசாயிகள் ஆயிரம் ஏக்கரில் முட்டை கோஸ் சாகுபடி செய்துள்ளனர்.

நடவு செய்த 75 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். நோய் தாக்காமல் இருந்தால் ஏக்கருக்கு 10 முதல் 15 டன் வரை மகசூல் கிடைக்கும். தற்போது மார்க்கெட்டில் முட்டைகோசுக்கு நல்ல விலை கிடைக்கிறது. அதே போல், அறுவடை சமயத்தில் விலை குறையாமல் இருக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : Rajakota ,Krishnagiri district ,Hosur, ,Solagiri ,Rayakot ,
× RELATED 3 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள்...