×

ஊட்டி அருகே தாயை பிரிந்து சுற்றிய பெண் புலி குட்டி மீட்பு

ஊட்டி: நீலகிரி வனக்கோட்டம் ஊட்டி வடக்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆரம்பி பிரிவு அருகில் உள்ள சோலாடா, அழகர்மலை பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் நேற்று முன்தினம் 2 புலி குட்டிகள் நடமாடியதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். மேலும், குட்டிகளுடன் தாய் புலி இருக்குமோ? என்ற அச்சத்தில் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு 2 புலி குட்டிகள் தனியாக இருப்பதை உறுதி செய்தனர். மேலும், தாய் புலி உயிருடன் உள்ளதா? அல்லது இறந்துவிட்டதா? என வனத்துறையினர் நவீன கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். தாய் புலி அப்பகுதிக்கு வராததாலும், குட்டிகள் மிகவும் சோர்வுடன் இருப்பதாலும் அவற்றை பிடிக்க முடிவு செய்து நேற்று ஒரு பெண் புலி குட்டியை பத்திரமாக மீட்டு பராமரித்து வருகின்றனர். தற்போது, அந்த புலி குட்டி மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளது. மற்றொரு குட்டியை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags : Ooty ,Solada, Alagarmalai ,Aarambi ,Nilgiris Forest Reserve ,Ooty North Forest Reserve ,
× RELATED காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய...