போலீசாருக்கான தபால் ஓட்டு முதல் நாளில் 1586 பேர் வாக்குப்பதிவு

கோவை, ஏப். 19: கோவையில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார், 17 முதல் 19 வரை 3 நாட்கள் தபால் ஓட்டு செலுத்த அந்தந்த சட்டசபை தொகுதிகளில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேட்டுப்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய தொகுதிகளில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திலும், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்,

கோவை வடக்கு தொகுதிக்கு கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் உதவி ஆணையர் அலுவலகம், கோவை தெற்கு தொகுதிக்கு கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், சிங்காநல்லூர் தொகுதிக்கு கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், பொள்ளாச்சி தொகுதிக்கு பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு கோவை மாநகர போலீசார் மற்றும் பல்வேறு சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் போலீசார் நேற்று மற்றும் நேற்று முன்தினம் தபால் வாக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி, கோவை மாநகர போலீசார் மற்றும் அதன் இதர துணைப் பிரிவுகளைச் சேர்ந்த 3,026 போலீசாரில் முதல் நாளான, நேற்று முன்தினம் 1,586 பேர் தபால் வாக்குப்பதிவு செய்துள்ளனர். மீதம் உள்ள 1440 பேரில் சிலர் நேற்று வாக்களித்துள்ளனர்.

 

Related Stories: