×

திருப்பூரில் 2 துணிக்கடைகளில் வருமானவரித்துறையினர் 2வது நாளாக சோதனை

திருப்பூர்: திருப்பூரில் 2 துணிக்கடைகளில் வருமானவரித்துறையினர் 2வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிவா டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஆனந்தம் சில்க்ஸ் ஆகிய துணிக் கடைகளில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்றும் நள்ளிரவு வரை சோதனை நடத்திய நிலையில் இன்றும் காலை முதல் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். ராமநாதபுரம் அக்ரஹாரம் பகுதியில் செயல்படும் ஆனந்தம் ஜவுளிக்கடையில் 2வது நாளாக ஐடி சோதனை மேற்கொண்டது. புதுக்கோட்டை மேலராஜ வீதியில் உள்ள ஆனந்தம் ஜவுளிக்கடையில் வருமானவரித்துறை சோதனை செய்தனர். கும்பகோணத்தில் உள்ள ஆனந்தம் ஜவுளிக்கடையிலும் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டனர். கடலூர் இம்பீரியல் சாலையில் உள்ள ஆனந்தம் ஜவுளிக் கடையில் 2வது நாளாக வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டனர்

Tags : Income Tax Department ,Tiruppur ,Siva Textiles ,Anandham Silks ,
× RELATED நெல்லுக்கான ஊக்கத்தொகையை நிறுத்த...