×

தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமையும்: முகுல் வாஸ்னிக் பேட்டி

சென்னை: தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: கூட்டணி கட்சிகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் செயல்பட்டு வருகிறோம். தமிழக மக்களின் மனநிலையும் எங்களுக்குச் சாதகமாக உள்ளது. தமிழ்நாட்டில் எங்களுடைய கூட்டணியான திமுக மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உறுதியாக உள்ளது.

தேர்தல் பிரசாரம் இப்போது தான் தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் அது உச்சத்தை எட்டும். காங்கிரஸ் தலைவர்களின் அனைத்து பிரசார அட்டவணையும் விரைவில் இறுதி செய்யப்படும். அதை ஊடகங்களுக்கு மிக விரைவில் அறிவிப்போம். கேரளா, புதுச்சேரி, அசாம் போன்ற மாநிலங்களில் தேர்தல்கள் முதல் கட்டமாக முன்னதாகவே நடந்தது. தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கத்தில் தேர்தல்கள் அடுத்த கட்டமாக நடக்க இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

அதனால், தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கத்தை விட முதல் கட்டம் தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் முதலில் கவனம் செலுத்துவது காங்கிரஸ் தலைமையின் நோக்கமாக இருந்தது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரத்திற்கு வருவது குறித்த அறிவிப்புக்கு இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். அதன்பின்பு எங்கள் தலைவர்கள் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்வது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும்.

ராகுல் காந்தி, ஸ்டாலின் இணைந்து பிரசாரம் செய்யவில்லை என்று நீங்கள் வரிக்கு வரி அர்த்தம் தேட முயல வேண்டாம். நீங்கள் செய்துள்ள மதிப்பீடுகளில் எந்த உண்மையும் இல்லை. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆகிய நாங்கள், நெருங்கிய ஒத்துழைப்பில் செயல்பட்டு வருகிறோம். எங்களுடைய கூட்டணி, தமிழ்நாட்டில் வலுவாக உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் எங்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

Tags : DMK ,Tamil Nadu ,Mukul Wasnik ,Chennai ,Tamil Nadu Congress ,Delhi ,
× RELATED காரைக்கால் மீன் பிடித்துறைமுகத்தில்...