×

தேர்தல் நெருங்குது சும்மா இருக்காதீங்க.. வீடுவீடா போங்க.. தொண்டர்களை விரட்டும் விஜய்

சென்னை: தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வருவதால் தமிழ்நாட்டு மக்களை வீட்டுக்கு வீடு தேடித் தேடி நேரில் சந்தியுங்கள் எனத் தவெகவினருக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வருகிறது. வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் எல்லோரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள். அடுத்த பத்து நாள்களும் உங்களுக்கு உகந்த நேரத்தில் காலை, மாலை என இரு வேளையும் மக்களை வீட்டுக்கு வீடு தேடித்தேடி நேரில் சந்தியுங்கள்.

வாக்கு கேளுங்கள். மாநில மற்றும் அனைத்து நிலை மாவட்ட நிர்வாகிகள், கழகத்தின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை தாருங்கள். அனைவரையும் அரவணைத்து தேர்தல் பணியாற்றுங்கள். ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான இந்த போரில் வெற்றிப் பேரணியாக ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்று சேர்ந்து மக்களாட்சியை அமைப்போம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : Vijay ,Chennai ,Tamil Nadu ,
× RELATED காரைக்கால் மீன் பிடித்துறைமுகத்தில்...