சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அகில இந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் ஜீரோ பிஜேபி இயக்கம் தொடக்கம்

 

சென்னை: சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அகில இந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் ஜீரோ பிஜேபி இயக்கம் தொடக்கம். இந்திய அரசியலமைப்பு, தமிழ்நாட்டை காக்க ஜீரோ பிஜேபி இயக்கம் தொடக்கம். ஒரு எல்.பி.ஜி. சிலிண்டர் ரூ.1000 நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று அரி பரந்தாமன் கூறியுள்ளார். 3 நீதிபதிகள் மீது பதவி நீக்கக் கோரும் தீர்மானம் உள்ளது. அசாம், பீகாரில் தலைமைச் செயலாளர்களை மாற்றாமல் தமிழ்நாட்டில் மட்டும் மாற்றுவது ஏன் என்று ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜீரோ பிஜேபி” என்பது தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்து வரும் ஒரு அரசியல் பிரச்சார முழக்கமாகும். ஒன்றிய பா.ஜ.க. அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ‘பூஜ்ஜியம்’ (Zero) நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டி, வரவிருக்கும் தேர்தலில் பாஜகவிற்கு ‘ஜீரோ’ இடங்களை வழங்க வேண்டும் என மக்கள் மத்தியில் திமுக இந்த இயக்கத்தைத் தீவிரப்படுத்துகிறது

பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு முக்கிய திட்டங்களும் வராததால், “ஜீரோ கொடுத்த பாஜகவுக்கு, தேர்தலில் அதையே திருப்பித் தர வேண்டும்” என முதலமைச்சர் ஸ்டாலின் விருதுநகர் இளைஞரணி மாநாட்டில் பிரச்சாரம் செய்தார். தாய் மொழியான தமிழுக்கு பல்வேறு காலகட்டங்களில் ஆபத்து வந்தபோது, அதனை கடுமையாக போராடி தடுத்து இருக்கிறோம்.

ஆனாலும், மும்மொழி கொள்கை எனும் பெயரில் இந்தியை திணிக்கும் ஆபத்து இன்றும் இருக்கிறது. மொழியை அழித்தால், நம் அடையாளத்தை அழித்துவிடலாம் என நினைக்கிறார்கள். நமக்கு கல்வி எதற்கு என்று ஒதுக்கிவைத்திருந்தார்கள். வேலைகளில் இடம் கிடையாது. அந்த அநீதியை இட ஒதுக்கீட்டால் மாற்றினோம். ஆனால், தற்போது நீட் போன்ற தேர்வுகளால் பழைய முறையை உண்டாக்குகிறார்கள்.

அனைத்து வகையான அமைப்புகளின் தரவரிசை பட்டியலிலும் தமிழ்நாடுதான் டாப். தமிழ்நாடுதான் சூப்பர் ஸ்டார் ஸ்டேட். அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறி இருக்கிறது. தேர்தலை மனத்தில் வைத்துதான் பட்ஜெட்டில் எதாவது வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், இந்த முறையும் அவர்கள் கொடுத்தது ‘ஜீரோ’; எனவே நாமும் தேர்தலில் அவர்களுக்கு அதே ‘ஜீரோ’ தானே கொடுக்க வேண்டும்

 

 

Related Stories: