சென்னை: மக்களவை தொகுதி மறுவரையறை என்பது அதிகாரத்தை மாற்றி அமைக்கும் சூழ்ச்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். நாடாளுமன்ற அடிப்படை கட்டமைப்புகளை மோடி அரசு திட்டமிட்டு அழித்து வருகிறது. ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற வேண்டிய நாடாளுமன்றம், பெயருக்கு கூட்டம் நடத்தும் இடமாக மாறிவிட்டது.
