விஜய் பங்கேற்ற ரோடு ஷோவில் விதி மீறல்: தவெக நிர்வாகிகள் 11 பேர் மீது வழக்குப் பதிவு

விஜய் பங்கேற்ற ரோடு ஷோவில் விதிமுறைகளை மீறியதாக தவெக நிர்வாகிகள் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார். விமான நிலையத்தை வந்தடைந்த விஜய்யை கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் பிரசார வேனில் ஏறி நெல்லை நோக்கி புறப்பட்டார்.

அவரது வேனை மோட்டார் சைக்கிள்களில் தொண்டர்கள் பின் தொடர்ந்து செல்வதை தவிர்ப்பதற்காக போலீசார் ஆங்காங்கே தொண்டர்களை தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில், விஜய் பங்கேற்ற நெல்லை, தூத்துக்குடி பிரசாரங்கள் சிறு விபத்துகளும் ஏற்பட்டன. நெல்லை மாவட்டம், வாகைகுளம் பகுதியில் விஜய்யின் வாகனத்தை தவெக தொண்டர்கள் பின்தொடர்ந்து சென்றபோது, முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் கீழே விழுந்ததில் பின்வந்த வாகனங்களும் மோதியதில் 7 பேர் காயமடைந்தனர்.

தொடர்ந்து, பிரசாரம் நடைபெற்ற பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், சாலையைக் கடக்க முயன்ற ஒருவர் மீது அரசுப் பேருந்து மோதியதில், பலத்த காயமடைந்து. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து செல்ல முயன்ற வாகனங்களால் ஏற்பட்ட விபத்தில் மொத்தம் 16 பேர் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, விபத்துகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட போலீசார் தவெக நிர்வாகிகள் 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: