புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பாகூர் பகுதியில் வாக்காளர்களுக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் டோக்கன் விநியோகம் செய்தனர். டோக்கன் விநியோகித்தவர்களை திமுக வேட்பாளரின் ஆதரவாளர்கள் விரட்டிப் பிடிக்க முயன்ற போது, அவற்றை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
