பண்ருட்டியில் வாக்கு சேகரித்த சிறுவர்கள் தவெக வேட்பாளர், விஏஓ மீது வழக்கு

பண்ருட்டி, ஏப். 8: வாக்கு சேகரிக்க சிறுவர்களை பயன்படுத்திய தவெக வேட்பாளர் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த விஏஓ மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதிக்கு உட்பட்ட சாத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் பண்ருட்டி தொகுதியின் தவெக வேட்பாளராக உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன் இப்பகுதியை சேர்ந்த சிறுவர்களுக்கு இனிப்பு வாங்கி கொடுத்து விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கவும், துண்டு பிரசுரங்கள் வழங்கவும் கூறியுள்ளார்.

மேலும் மரங்கள் மற்றும் இரும்பு மின் கம்பங்களில் ஏறி கொடி, தோரணங்கள் கட்ட சிறுவர்களை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் போலீசார் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்கு சேகரிக்க சிறுவர்களை பயன்படுத்தியதற்காக பண்ருட்டி தொகுதி தவெக வேட்பாளர் மணிகண்டன் மற்றும் இவருக்கு உதவியாக இருந்த சாத்திப்பட்டு பகுதியை சேர்ந்த விசூர் கிராம நிர்வாக அலுவலர் அரவிந்தன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: