விழுப்புரம் மாவட்டத்தில் சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரிப்பு புக் செய்து ஒரு மாதமாகியும் கிடைக்கவில்லை

விழுப்புரம், ஏப். 1: விழுப்புரம் மாவட்டத்தில் சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. புக் செய்து ஒரு மாதமாகியும் கிடைக்காததால் இல்லத்தரசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஹோட்டல் தொழிலும் முடங்கியுள்ள நிலையில் ஒன்றிய அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. மேற்கு வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. ஈரான் மீது தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு பெட்ரோல், டீசல் தட்டுப்பாடும், அதனை தொடர்ந்து காஸ் சிலிண்டர் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. இதனால் ஹோட்டல் தொழில்கள் முற்றிலும் முடங்கிய நிலையில் தற்போது வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. புக் செய்து ஒரு மாதமாகியும் காஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் கடவம்பாக்கம்மணி கூறுகையில், தற்போது நடந்து வரும் அமெரிக்கா, ஈரான் போர் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர், வணிக சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இல்லத்தரசிகள், நுகர்வோர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு சமையல் எரிவாயு சிலிண்டர் வேண்டி செல்போனில் பதிவு செய்தால் மறுநாளே சமையல் எரிவாயு சிலிண்டர் வீட்டுக்கே வந்துவிடும்.

ஆனால் தற்போது பதிவு செய்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் இதுவரை சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்கவில்லை. தற்போது சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் நுகர்வோர்கள் விறகுகளை அதிக விலை கொடுத்து வங்கி அடுப்பில் உணவு தயாரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ெபட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மற்றும் அனைத்து தரப்பு பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஒன்றிய அரசின் பாரபட்சம்தான் காரணம். மாநிலங்களுக்கு தேவையான சிலிண்டர் எரிவாயுக்களை தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: