காட்டுமன்னார்கோவிலில் நான் போட்டியிடவில்லை: விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு!

சென்னை: வரும் தேர்தலில் காட்டுமான்னார்கோவிலில் திருமாவளவன் போட்டியிடவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். காட்டுமன்னார்கோவில் தொகுதி விசிக வேட்பாளராக ஜோதிமணி அறிவிக்கபப்ட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளதாவது; “சட்டப்பேரவைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினேன். ஏற்கெனவே திமுக கூட்டணியில் மங்களூரு தொகுதியில் வென்றவன் நான். பதவியில் எனக்கு பெரிய பிடிப்பு இல்லை. 2006 முதல் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என்பதில் உறுதியாக இருந்தேன்.

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று ஜெயலலிதா சொன்னபோது மறுத்தேன். வென்றாலும் தோற்றாலும் தனிச்சினத்தில்தான் போட்டி என்பதில் உறுதியாக இருந்தேன். 2021 தேர்தலிலேயே எம்.பி. பதவியை துறந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இருந்தது. நடைபெறப் போவது வழக்கமான தேர்தல் அல்ல. வலதுசாரிகள் திட்டமிட்டு பல்வேறு சதிகளைச் செய்தார்கள்.

எந்த ஆசைவார்த்தைக்கும் எந்த தூண்டுதலுக்கும் ஆளாகாமல் திமுக கூட்டணியை வலுவாக்கினேன். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பதை 1999ம் ஆண்டே முழங்கியவன்நான். இந்த முறை கூட்டணி ஆட்சி பற்றி பேச மாட்டோம் என திட்டவட்டமாக கூறினோம். திமுகவுக்கு ஆதரவாக என் நிலைப்பாட்டைத்தான் சட்டப்பேரவையில் விசிக எம்.எல்.ஏ.க்கள் முன்வைத்தனர்.

நான் பேசாத எதையும் சட்டப்பேரவையில் விசிக எம்.எல்.ஏ.க்கள் முன்வைக்கவில்லை. விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட 8 தொகுதிகளில் போட்டியிட 150 பேர் விருப்பம் தெரிவித்தனர். புதியவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பதற்காகவே ஏற்கெனவே இருந்தவர்களுக்கு வாய்ப்பு தரவில்லை. ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்தால் 9 பேர் எதிரியாகிறார்கள்.

ஆளூர் ஷா நவாஸ் பிரச்சாரத்துக்கு செல்ல முன்வந்தார். விசிக நலனுக்காக என்றென்றும் இருப்பேன் என்று ஆளூர் ஷா நவாஸ் கூறினார். உள்நோக்கத்தோடு சட்டப்பேரவைக்குள் செல்ல திருமா நினைக்கிறார் என கட்டுக்கதையை பரப்பினார்கள். எனக்கு யாரும் அழுத்தம் தர முடியாது. என்னை கட்டாயப்படுத்தி ஒரு வேலையை யாராலும் செய்ய வைக்க முடியாது.

திமுக கூட்டணியின் நலனை பாதிக்கும் வகையில் திட்டமிட்டு கருத்து பரப்பப்படுகிறது. முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன் என்று நான் இருக்க மாட்டேன். பின்வாங்குவதும் ராஜதந்திரம்தான்; யுக்தியை மட்டுமே மாற்றியுள்ளேன். பதவி ஆசை இருந்திருந்தால் 2006ல் சட்டமன்றத் தேர்தலில் நின்றிருப்பேன். பதவிக்காக நான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கவில்லை. வரும் தேர்தலில் காட்டுமான்னார்கோவிலில் திருமாவளவன் போட்டியிடவில்லை” என தெரிவித்தார். இதையடுத்து காட்டுமன்னார்கோவில் தொகுதி விசிக வேட்பாளராக ஜோதிமணி அறிவிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: