திராவிட மாடல் ஆட்சி 2.O-க்கு குமரி மாவட்டம் Ready-ஆ..? நாகர்கோவிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

கன்னியாகுமரி; தேர்தலில் திமுகவை 7வது முறையாக ஆட்சியில் அமர்த்த ரெடியா..? திராவிட மாடல் ஆட்சி 2.O-க்கு குமரி மாவட்டம் Ready-ஆ..? என்று நாகர்கோவிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். திமுக கூட்டணி வேட்பாளர்கள் குமரி-மகேஷ்; நாகர்கோவில்-ஆஸ்டின், பத்மநாபபுரம்-செல்லசுவாமி; குளச்சலில் தாரகை, விளவங்கோட்டில் பிரவீன் போட்டியிடுகின்றனர். அவர்களை ஆதரித்து இன்று நாகர்கோயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த பிரச்சாரத்தில் முதல்வர் பேசியதாவது: குமரியில் பிரமாண்ட நலத்திட்ட நிகழ்ச்சியை நடத்தியது திமுக அரசு. திராவிட மாடல் அரசின் சாதனைகளை பட்டியலிட வேண்டும் என்றால் இன்றைய ஒரு நாள் போதாது. பிப்ரவரி மாத இறுதியில் நாகர்கோவிலுக்கு நான் வந்தேன். அதுவும் சாதனை படைத்த ஒரு அரசியல் நிகழ்சிகாக வந்திருதேன். திராவிட மாடல் முதல் வர்சனின் நிறைவான அரசு நல நிகழ்சியும் குமரி மாவட்ட நிகழ்சிதான். கிரிகெட்டின் கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்பது போல குமரி மாவட்டத்தில் மேலும் பல நிகழ்சிகளிலும் கலந்து கொண்டேன். ஒரு மாதம் போனதே தெரியவில்லை. அதற்குள் திரும்பவும் உங்களை பார்க்க வந்துவிட்டேன்.

2026 சட்டமன்ற தேர்தலில் திரவிட முன்னேற்ற கழகத்தை 7வது முறையாக ஆட்சியில் அமர்த்த ரெடியா..? திராவிட மாடல் ஆட்சி 2.O-க்கு குமரி மாவட்டம் Ready-ஆ..? திருவாரூர், திருச்சி, கரூர், ஈரோடு, கோவை, நெல்லை ஆகிய ஊர்களில் பரப்புரையை முடித்துவிட்டுதான் நான் இந்த மாவட்டத்திற்கு வந்துள்ளேன். அவர்கள் எல்லாம் தயாராகிவிட்டனர். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற்று திராட மாடல் நல்லாட்சி மீண்டும் அமைய வேண்டும் என்றால் குமரி மாவட்டத்தில் இருக்கு கூடிய எல்லா தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றாக வேண்டும். என முதல்வர் கூறினார்.

மீன் பிடி தடைக்கால மாத நிவாரணத் தொகையாக ரூ.12,000 வழங்கப்படும். மீன்கள் குறைவான காலகட்டத்தில் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.9000 ஆக உயர்த்தி வழங்கப்படும். மீனவர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான வயது வரம்பு 70 ஆக அதிகரிக்கப்படும். என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.

மீனவர்கள் பிரச்னையில் ஒன்றிய அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்விடைந்துள்ளது. சிறிய நாடுகள் கூட நம்மை அச்சுறுத்தும் வகையில் நமது வெளியுறவுக் கொள்கையை ஒன்றிய அரசு வைத்துள்ளது. மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுக்காத பிரதமர் மோடி, தான் ஒரு பலவீனமான பிரதமர் என்பதை ஏற்பாரா? மாட்டாரா? என முதல்வர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு காவடி தூக்குகிறார். அதிமுக பாஜகவின் கொத்தடிமை கூட்டமாக மாறிப் போயுள்ளது. தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள சுயநலத்திற்காக இப்படி ஒரு நிலைமையில் அதிமுகவை கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.

Related Stories: