கடந்த நிதியாண்டில் சுங்கச்சாவடிகளில் ரூ.82,000 கோடி வசூல்: Fastag மூலம் பரிவர்த்தனை 5.7% அதிகரிப்பு

டெல்லி: கடந்த நிதியாண்டில் மட்டும் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ரூ.82,900.16 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 14% அதிகமாகும். Fastag மூலம் பரிவர்த்தனை முந்தைய நிதியாண்டை விட கடந்த நிதியாண்டில் 5.7% அதிகரித்துள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. புதிய சுங்கச் சாலைகள் சேர்க்கப்பட்டது, துரிதப்படுத்தப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் புதிய வருடாந்திர ஃபாஸ்டேக் (FASTag) வசதியின் அறிமுகம் ஆகியவற்றை மூலம் சுங்கச் சாவடி கட்டணம் அதிகரித்துள்ளது.

2025 நிதியாண்டில் ரூ.72,930.83 கோடி மதிப்பிலான சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஈரான் போரினால் ஏற்பட்ட இடையூறுகள் இருந்தபோதிலும், தொடர்ச்சியான பொருளாதாரச் செயல்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், மார்ச் மாதத்தில் வணிக வாகனங்களுக்கான மொத்த சுங்கக் கட்டண வசூல், பிப்ரவரியில் இருந்த ரூ.6,924.57 கோடியிலிருந்து ரூ.7,193 கோடியாக உயர்ந்தது.

கடந்த எட்டு ஆண்டுகளில் ஆண்டு சுங்கக் கட்டண வசூல் மும்மடங்குக்கும் மேலாக உயர்ந்துள்ளது.

Related Stories: