×

லால்குடி தொகுதி தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனின் உறவினர் வீட்டில் 50 லட்சம் ரூபாய் பறிமுதல்

லால்குடி: திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்நிலையில் லால்குடி அருகே உள்ள மளவனூர் கிராமத்தை சேர்ந்த கு.ப.கிருஷ்ணனின் மைத்துனரான நீலமேகம் மகன் அரவிந்த் வீட்டில் பணம் பதுக்கி இருப்பதாக தேர்தல் பறக்கும்படைக்கு தகவல் வந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும்படை அலுவலர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்றிரவு 11 மணி அளவில் அரவிந்த் வீட்டுக்கு வந்து கதவை தட்டினர். அப்போது வீட்டிலிருந்த தந்தை, மகன் கதவை திறக்கவில்லை. இதனால் கோபமடைந்த அதிகாரிகள் கதவை திறக்க முடியுமா, முடியாது என ஆவேசமாக கேட்டனர். பின்னர் கதவு திறக்கப்பட்டது.

பறக்கும்படையினர் வீட்டுக்குள் சென்று சோதனையிட்டபோது அறையில் ஒரு பையில் கட்டு கட்டாக ரூ.50 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.10லட்சம் வரை மட்டுமே பறிமுதல் செய்ய தேர்தல் பறக்கும் படைக்கு அதிகாரம் உள்ளதால் இதுகுறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து திருச்சியிலிருந்து வருமான வருமான வரித்துறை அதிகாரிகள் லால்குடி தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆர்டிஓவுமான தர், உதவி தேர்தல் நடத்து அலுவலரும் தாசில்தாருமான தமிழ்செல்வனுடன் சென்றனர்.

பின்னர் பணம் எண்ணும் இயந்திரத்தை எடுத்து சென்று அந்த பணத்தை எண்ணியபோது ரூ.50லட்சம் இருந்தது தெரியவந்தது. இந்த பணத்தை எதற்காக வைத்துள்ளீர்கள், உரிய ஆவணங்கள் இருக்கிறதா என தந்தை, மகனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சரமாரி கேள்வி கேட்டனர். ஆனால் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து அதிகாரிகள் பையுடன் பணத்தை பறிமுதல் செய்து வாகனத்தில் எடுத்து சென்றனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Lalgudi Constituency ,Ku. P. Kṛṣṇa ,Lalgudi ,Former ,Minister ,Daveka ,Lalgudi Assembly Constituency ,Tirichi District ,P. Kṛṣṇa ,Malavanur ,Lalkudi ,Nilamekam ,Arvind ,
× RELATED பிரதமர் மோடி இன்று ரோடுஷோ:...