×

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடந்து சென்று மக்களிடம் வாக்கு சேகரிப்பு

சென்னை: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக சார்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ள திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதய நிதி ஸ்டாலின் இன்று காலை திருவல்லிக்கேணி பகுதிக்கு உட்பட்ட மாட்டாங்குப்பம், வி.ஆர். பிள்ளை தெரு, கற்பக கன்னியம்மன் கோவில் தெரு 1 முதல் 6 தெருக்கள், பழனி அம்மன் கோயில் தெரு 1 முதல் 6 தெருக்கள், பழைய கட்டை தொட்டி தெரு, புதிய கட்டை தொட்டி தெரு, சுங்குவார் தெரு உள்ளிட்ட இடங்களில் வீடு வீடாக நடந்து சென்றவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவருக்கு அப்பகுதி மக்கள் மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பை அளித்தனர். மேலும், திமுகவின் தேர்தல் வாக்குறுதி அடங்கிய துண்டு பிரசுரங்களை கொடுத்தும், ஐந்தாண்டு கால முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்த திட்டங்களின் சாதனை குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துரைத்து துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Chepauk-Thiruvallikeni ,Chennai ,DMK ,
× RELATED பிரதமர் மோடி இன்று ரோடுஷோ:...