×

சீமான் மீது வழக்குப்பதிவு

கோவை: கோவை மாவட்டம் காரமடை தெற்கு ரத வீதியில் நேற்று இரவு நாதக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சீமான் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசினார். அவர் சரியாக பேசி முடிக்கும் போது இரவு 10.16 மணி. தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி இரவு 10 மணிக்குள் பிரசாரத்தை முடிக்க வேண்டும்.

ஆனால், 16 நிமிடங்கள் தாமதமாக சீமான் தனது உரையை முடித்தார். இதுகுறித்த புகாரின்பேரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மண்டல செயலாளர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அன்சர்அலி மற்றும் 3 வேட்பாளர்கள் என 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Seeman ,Coimbatore ,Nathaks ,Karamadai South Ratha Road ,
× RELATED சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில்...