×

இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி ரூ.38,424 கோடியாக உயர்வு

புதுடெல்லி: டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், \\”2025-2026ம் நிதியாண்டில் ரூ.38,424கோடியை என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதியானது ஒரு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 62.66சதவீதம் வலுவான வளர்ச்சியை சுட்டிக்காட்டுகின்றது.

பாதுகாப்புத்துறை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள இந்த ரூ.14,802கோடி அளவிலான பெரும் வளர்ச்சியானது, இந்தியாவின் உள்நாட்டுத் திறன்கள் மற்றும் மேம்பட்ட உற்பத்தி வலிமை மீது வளர்ந்து வரும் உலகளாவிய நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. பாதுகாப்புத்துறையின் பொதுத்துறை நிறுவனங்கள் 54.84சதவீதமும், தனியார் துறை நிறுவனங்கள் 45.16 சதவீதம் பங்களித்துள்ள நிலையில், ஒரு கூட்டு மற்றும் தற்சார்பு பாதுகாப்புச் சூழலமைப்பின் வலிமையை இந்த சாதனை மைல்கல் வௌிப்படுத்துகின்றது\\” என்றார்.

Tags : India ,New Delhi ,Delhi ,Defence Minister ,Rajnath Singh ,
× RELATED ஏப்.21 முதல் 23ம் தேதி வரை...