விறகு அடுப்பிற்கு மாறிய ஓட்டல்கள்

போச்சம்பள்ளி, ஏப்.3: ஈரான்-அமெரிக்க போர் எதிரொலியாக, வர்த்தக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், போச்சம்பள்ளி, மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு ஓட்டல்களில் விறகு அடுப்புக்கு மாறி வருகிறார்கள். மேலும், அதிக நேரம் வேக வைக்கப்படும் ஷவர்மா சிக்கன் போன்ற உணவு வகைகள் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, காஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்து வருவதால் பெரும்பாலான ஓட்டல்கள், சிற்றுண்டி கடைகள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான சிறு ஓட்டல்களில் விறகு அடுப்பு வைத்து சமைத்து வருகின்றனர். இதன் காரணமாக, விறகு விலையும் உயர்ந்து வருகிறது.

Related Stories: